பிரஜா சக்தி 2026 – “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் திட்டங்கள்” திட்டம் வெற்றிகரமாக ஆரம்பம்
படல்கும்புர பிரதேச செயலாளர் பிரிவில் கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் “பிரஜா சக்தி 2026 – ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் திட்டங்கள்” திட்டத்தின் கீழ், கட்டுகஹகல்கே கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள கொங்கஹவெவ தெற்கு கால்வாயின் இறுதிப்பகுதியில் உள்ள வடிகால் கால்வாயை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று கௌரவ பிரதியமைச்சர் ஆர். எம். ஜயவர்தன அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
அத்துடன்,
✅ மதுகஸ்முல்ல கிராம சேவகர் பிரிவில் உள்ள உடவெல ஹெவன்அராவ வயல் பகுதியில் கால்வாய் அபிவிருத்தி செய்யும் திட்டமும்,
✅ தேரப்பஹுவ கிராம சேவகர் பிரிவில் உள்ள கொளணிய வயல் பகுதியில் கால்வாய் அபிவிருத்தி செய்யும் திட்டமும்
இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டன.
இத்திட்டங்கள், விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, கிராமப்புற அபிவிருத்திக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புற அபிவிருத்திக்கு புதிய ஊக்கம் – மக்கள் பங்கேற்பால் வலுப்பெறும் சமூகங்கள்!






















